தனுஷ், பி.எஸ்.மித்ரன் புதிய கூட்டணி? | ப்ரீ புக்கிங்கில் 40 லட்சம் வசூலித்த 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சல்மான்கானின் 'மாத்ருபூமி' | அமேசான் பிரைம் ட்ரெண்டிங்கில் 2வது இடம் பிடித்த வரலட்சுமியின் 'எஸ்.சரஸ்வதி' | 'கர' படத்திற்காக தனுஷ் பாடியுள்ள 'கண்ணம்மா என் கண்ணம்மா' பாடல் வெளியானது! | வாழ்வில் சோர்வு ஏற்பட்டால் அழுவேன் : கவுதம் ராம் கார்த்திக் ஓப்பன் டாக் | பிளாஷ்பேக் : தமிழில் தாக்குப்பிடிக்க முடியாத சுதா ராணி | பிளாஷ்பேக் : திரைப்படமான முதல் சமூக தொடர்கதை | நடிகர்கள் பின்னால் இளைஞர்கள்... : ஜாக்கிரதையாக இருக்க சொன்ன ரஜினி | பாராட்டினார் விஜய்சேதுபதி: பீல் பண்ணுகிறார் வீஜே பார்வதி |

நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த 'கல்கி 2898 ஏடி' படம் நேற்று முன்தினம் வெளியானது. பேண்டஸி, சயின்ஸ் பிக்ஷன் படமாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
திரையுலகப் பிரபலங்கள் பலரும் படத்தைப் பார்த்து பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், “கல்கி பார்த்தேன், வாவ்… என்ன ஒரு காவியம். இயக்குனர் நாக் அஷ்வின் இந்திய சினிமாவை மாறுபட்ட தளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டார். இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்துள்ளேன்,” என்று படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார்.
அதற்கு பதிலளித்த இயக்குனர் நாக் அஷ்வின், “சார், பேச முடியவில்லை, எங்களது குழுவினர் உட்பட அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.