சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை வைத்த ‛ஒய் நாட் ஸ்டுடியோஸ்' | சாய் பல்லவியைப் பாராட்டிய அமீர்கான் | ‛காந்தாரா' நாயகி சப்தமி கவுடாவின் படம் தமிழிலும் ரிலீஸாகிறது | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் |

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழி சினிமா இசை ரசிகர்களின் மனதில் என்றென்றும் நிலையான இடத்தைப் பிடித்திருப்பவர் மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம்.
கடந்த 2020ம் வருடம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மறைவு கோடிக்கணக்கான ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.
அவரது உடல், திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கம் கிராமத்தில் உள்ள எஸ்பிபியின் பண்ணைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் தற்போது நினைவாலயம் கட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளார் அவரது மகன் எஸ்பி சரண்.
“சொர்க்கத்தின் ஆசியில், எனது கனவு திட்டத்தை இன்று ஆரம்பித்துவிட்டேன்… எஸ்பிபி மெமோரியல்,” என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.