என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழி சினிமா இசை ரசிகர்களின் மனதில் என்றென்றும் நிலையான இடத்தைப் பிடித்திருப்பவர் மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம்.
கடந்த 2020ம் வருடம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மறைவு கோடிக்கணக்கான ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.
அவரது உடல், திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கம் கிராமத்தில் உள்ள எஸ்பிபியின் பண்ணைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் தற்போது நினைவாலயம் கட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளார் அவரது மகன் எஸ்பி சரண்.
“சொர்க்கத்தின் ஆசியில், எனது கனவு திட்டத்தை இன்று ஆரம்பித்துவிட்டேன்… எஸ்பிபி மெமோரியல்,” என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.