'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

விஜய் கார்த்திகேயா இயக்கத்தில், கிச்சா சுதீப், வரலட்சுமி, சம்யுக்தா மற்றும் பலர் நடிக்கும் கன்னடப் படம் 'மேக்ஸ்'. இப்படத்தைத் தமிழ் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
கடந்த பத்து மாதங்களாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு மகாபலிபுரத்தில் தற்போது முடிவடைந்துள்ளது. இது குறித்து வீடியோ பதிவு ஒன்றுடன் படப்பிடிப்பு முடிந்தது பற்றி சுதீப் பதிவிட்டுள்ளார்.
“மகாபலிபுரத்தில் 'மேக்ஸ்' படப்பிடிப்பு முடிவடைந்தது. 10 மாதங்கள் நீண்ட பயணம் இது, அதன் ஒவ்வொரு பகுதியையும் ரசித்தேன். செட்டில் அற்புதமான குழுவினர் அன்பான நடிகர்கள் இருந்தனர். என்னை சிறப்பாக நடத்தியதற்கு நன்றி தாணு சார். விஜய் மற்றும் மொத்த குழுவினருக்கும் ஒட்டு மொத்த நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.




