வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

கடந்த வருடம் மலையாளத்தில் ஆர்டிஎக்ஸ் என்கிற திரைப்படம் வெளியானது. வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களான ஆண்டனி வர்கீஸ், ஷேன் நிகம் மற்றும் நீரஜ் மாதவ் என மூன்று பேர் இந்த படத்தில் கதாநாயகர்களாக நடித்திருந்தனர். தனது குடும்பத்தை துன்புறுத்தி அவமதித்தவர்களுக்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து பாடம் புகட்டும் ஒரு இளைஞனின் பழிவாங்கும் கதையாக இந்த படம் உருவாகி இருந்தது.
முழுக்க முழுக்க ஆக்ஷனை மட்டுமே மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியிருந்தார் அறிமுக இயக்குனர் நகாஷ் ஹிதாயத். அடுத்ததாக பிரேமலு பட நாயகன் நஷ்லேனை கதாநாயகனாக வைத்து இவர் தனது அடுத்த படத்தை இயக்க இருக்கிறார்.
இந்த நிலையில் இவர் நடிகர் ரஜினிகாந்தை சமீபத்தில் சந்தித்துள்ளார். விமான நிலையத்தில் நிகழ்ந்த இந்த சந்திப்பின்போது பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ் மாஸ்டர்கள் இருவரும் உடன் இருந்தனர். வேட்டையன் படத்திற்கு சண்டை பயிற்சியாளர்களாக பணியாற்றி வரும் அன்பறிவு மாஸ்டர்கள் தான் ஆர்டிஎக்ஸ் படத்திற்கும் பணியாற்றினர். அதில் மார்சியல் ஆர்ட்ஸ் கலையை பயன்படுத்தி ஆறு சண்டை காட்சிகளை அமைத்து பிரமிக்க வைத்திருந்தனர். அந்த நட்பின் அடிப்படையில் அவர்கள் மூலமாக வேட்டையன் படப்பிடிப்பில் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார் இயக்குனர் நகாஷ். ஹிதாயத்.
இந்த சந்திப்பு குறித்து இயக்குனர் நாகாஷ் ஹிதாயத் தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறும்போது, “உங்களது கனவுகளை நனவாக்க உண்மையிலேயே இந்த பிரபஞ்சமே திட்டம் தீட்டிய போது..” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.




