காலையில் தெலுங்கு முறைப்படி, மாலையில் கொடவா முறைப்படி…விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் | சிம்புவை வைத்து வரலாற்று படத்தை திட்டமிட்ட ராஜூ முருகன்! | சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்! | திருமணத்தை நம்ப முடியவில்லை : அமலாபால் ஓபன் டாக் | ஜி.வி.பிரகாஷின் 'மென்டல் மனதில்' படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ வெளியானது! | சிவகார்த்திகேயன் அம்மாவாக ரம்யா நம்பீசன் | சினிமா இயக்குவதை மறந்துவிட்டேனா? நடிகர் சமுத்திரக்கனி பதில் | மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பாரதிராஜா : வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் | ரஜினிகாந்த், சிபி படத்தில் இணையும் பசில் ஜோசப், பிரியங்கா மோகன் | 'தாய் கிழவி' பார்த்துவிட்டு அக்கா ராதிகாவை கட்டிபிடித்து அழுதது ஏன்? நடிகை நிரோஷா |

நடிகை நயன்தாரா திருமணம், குழந்தை வாழ்க்கைக்கு பிறகு குறிப்பிட்ட சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். ஹிந்தியில் ஜவான் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் தற்போது தமிழில் எல்.ஐ.சி, டெஸ்ட், மண்ணாங்கட்டி, தனி ஒருவன் 2 போன்ற படங்களில் நடிக்கிறார். இதுதவிர யானையை மையமாக வைத்து உருவாகும் ஒரு படத்திலும் நடிக்கிறார்.
இது அல்லாமல் புதிய படங்களில் நடிக்க கதைகளையும் கேட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் நயன்தாராவை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார். இது ஒரு பெண் முதன்மை கதாபாத்திரம் கொண்ட கதையாம். நயன்தாராவுக்கும் கதையில் திருப்தி ஏற்படவே இப்போது அடுத்தகட்ட வேலைகள் துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




