ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

ஜெயம் ரவி நடிப்பில் சைரன் படம் தற்போது திரைக்கு வந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் சைரன் படம் திரைக்கு வந்த முதல் நாளில் மதுரைக்கு சென்ற ஜெயம் ரவி ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்துள்ளார். அப்போது அந்த தியேட்டர் முன்பு கூடிய ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
இந்த நிலையில் அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள முடியாத ரசிகர் ஒருவர் சோசியல் மீடியாவில், உங்களுடன் செல்பி எடுக்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். ஆனால் முடியவில்லை. உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுடன் மட்டும் செல்பி எடுத்து விட்டு, என்னைப் போன்றவர்களை அனுப்பி விட்டீர்கள். இது எனக்கு மோசமான நாள். உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்று தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.
அதற்கு ஜெயம் ரவிக்கு எக்ஸ் பக்கத்தில் பதில் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛மன்னித்து விடுங்கள் பிரதர். அன்றைய தினம் கிட்டதட்ட 300 பேருடன் செல்பி எடுத்துக் கொண்டேன். உங்களுடன் எடுப்பதை எப்படி தவறவிட்டேன் என்று தெரியவில்லை. சென்னைக்கு வாருங்கள் கண்டிப்பாக செல்பி எடுத்துக் கொள்வோம். வெறுப்பு வேண்டாம், அன்பை பரப்புங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.




