தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

நடிகர் ரஜினிகாந்த் தன்னை ஒரு ஆன்மிகவாதியாக வெளிப்படுத்திக் கொண்டு வருவதோடு, அவ்வப்போது இமயமலைக்கு சென்று பாபாஜியை வணங்கிவிட்டு வருவார். இதன் காரணமாகவே அவரை சோசியல் மீடியாவில் சங்கி என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில்தான், லால் சலாம் படத்தின் இசை விழாவில் அப்படத்தின் இயக்குனரான ஐஸ்வர்யா ரஜினி, என் தந்தை சங்கி இல்லை என்று ஒரு விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ரஜினிகாந்தை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவராக சித்தரிக்க முடியாது. அவர் மத நல்லிணக்கத்தை பேசக்கூடியவர். பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பவர். அவர் ஒரு மிகப்பெரிய ஸ்டைல் ஐகான். கருப்பாக இருப்பவர்களும் சூப்பர் ஸ்டாராக வர முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர். அதுமட்டுமின்றி ஆன்மிகத்தையும் சினிமா வாழ்க்கையும் தனித்தனியே பார்க்க கூடியவர் என்று தெரிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.




