தமிழக அரசு விருது பெற்ற சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான், கீர்த்தி சுரேஷ் | சினிமாவை போன்று விளம்பரங்களிலும் சம்பாதிக்கும் தமன்னா | நானியின் ‛தி பாரடைஸ்' படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் | சிக்கிரி சிக்கிரி பாடலுக்கு சொந்தமாக நடன அசைவை வெளிப்படுத்திய ராம்சரண் | துல்கர் சல்மானின் 41வது படத்தில் இணைந்த ஜெகபதிபாபு | மூத்த மகனும் டைரக்ஷனில் இறங்குகிறார் ; பிரித்விராஜின் அம்மா தகவல் | படப்பிடிப்பில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய மிருணாள் தாக்கூர் | 24வது வருட காதலர் தினம் : ஜெனிலியாவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்த கணவர் | பிரேமம் ரீ ரிலீஸ் : முதல் வரவேற்பை இப்போதும் பெறுமா? | திருமண வீடியோ உரிமை : வேண்டாமென்று மறுத்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா? |

தற்போது ஞானவேல் இயக்கி வரும் தனது 170வது படத்தின் நடித்து வரும் ரஜினிகாந்த் அதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 171வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்க உள்ளது. மேலும், ஜெயிலர் படத்தில் நடிப்பதற்கு முன்பு சில இளவட்ட இயக்குனர்களிடத்தில் கதை கேட்டார் ரஜினி. அவர்களில் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் என்ற படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி மற்றும் டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அதையடுத்து இவர்கள் இருவரின் இயக்கத்திலும் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் ரஜினியோ, நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தில் நடிக்க தொடங்கி விட்டார். இந்த நிலையில் ரஜினியிடத்தில் தான் கூறிய அதே சரித்திர கதையை சிம்புவிடத்தில் கூறி ஓகே செய்துவிட்டார் தேசிங்கு பெரியசாமி. அந்த படம் தான் தற்போது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்புவின் 48வது படமாக உருவாகப் போகிறது. அதோடு இந்த படத்தை மிகப் பிரமாண்டமாக 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.