ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

தமிழில் ராஜா ராணி என்ற படத்தில் இயக்குனர் ஆனவர் அட்லீ. அதன் பிறகு விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து இயக்கியவர் தனது ஐந்தாவது படமாக ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் ஆயிரம் கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக அவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனிடத்தில் கதை சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அட்லீ அளித்த ஒரு பேட்டியில், ஜவான் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருப்பதாக கூறி உள்ளார். எப்போதுமே முதல் பாகத்தோடு முடிந்து விடும் கதைகளைதான் நான் தேர்வு செய்து படமாக்குவேன். ஆனால் இந்த ஜவான் படத்தை மட்டும் இரண்டு பாகம் இயக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். அதனால் சரியான சந்தர்ப்பம் அமையும்போது ஷாருக்கானை வைத்து ஜவான் இரண்டாம் பாகத்தை இயக்குவேன் என்று கூறி இருக்கிறார்.




