சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

பழம்பெரும் நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகள் டிஸ்கோ சாந்தி. குடும்ப சூழ்நிலை காரணமாக 1980களில் சினிமாவிற்கு கவர்ச்சி ஆட்டம் ஆட வந்தார். அப்போது டிஸ்கோ நடனம் திரைப்படங்களில் பிரபலமாக இருந்தது. அந்த நடனத்தை ஆடியதால் டிஸ்கோ சாந்தி என்று அழைக்கப்பட்டார். அதன்பிறகு தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் ஆடினார்.தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீஹரி மரணம் அடைந்தார். அதன்பிறகு குடும்ப பொறுப்புகளை டிஸ்கோ சாந்தி கவனித்து வந்தார்.
இந்த நிலையில் தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள டிஸ்கோ சாந்தி தான் தற்போது வருமானம் இன்றி வாழ்ந்து வருவதாகவும், இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டு அந்த பணத்தில் வாழ்ந்து வருவதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: எனது கணவர் உயிரோடு இருந்தபோது நிறைய பேருக்கு பணம் கொடுத்திருந்தார். அவர் இறந்த பிறகு நாங்கள் பணம் கொடுக்க வேண்டியவர்கள் மட்டுமே என் வீட்டிற்கு வந்தார்கள். எங்களுக்கு பணம் தர வேண்டியவர்கள் யாரும் வீட்டு பக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை. எங்களிடம் இருந்த நகை, கார், நிலம் எல்லாவற்றையும் விற்று கடனை அடைத்து விட்டோம். ஒரு காருக்கு தவணை கட்ட முடியாமல் வங்கி திருப்பி எடுத்துக் கொண்டது.
இப்போது என்னிடம் அவர் கட்டிய தாலி மட்டுமே மிச்சம் இருக்கிறது. இரண்டு வீடுகள் உள்ளன அந்த வீட்டு வாடகையை வைத்து காலத்தை ஓட்டுகிறோம். சினிமா துறையில் இருந்து யாரும் எங்களை உயிரோடு இருக்கிறோமா இல்லையா என்று கூட எட்டிப் பார்க்கவில்லை. என்று கூறியுள்ளார்.
டிஸ்கோ சாந்தியின் தங்கை லலிதாகுமாரியும் நடிகை என்பதும், அவர் பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.




