புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
பழம்பெரும் நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகள் டிஸ்கோ சாந்தி. குடும்ப சூழ்நிலை காரணமாக 1980களில் சினிமாவிற்கு கவர்ச்சி ஆட்டம் ஆட வந்தார். அப்போது டிஸ்கோ நடனம் திரைப்படங்களில் பிரபலமாக இருந்தது. அந்த நடனத்தை ஆடியதால் டிஸ்கோ சாந்தி என்று அழைக்கப்பட்டார். அதன்பிறகு தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் ஆடினார்.தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீஹரி மரணம் அடைந்தார். அதன்பிறகு குடும்ப பொறுப்புகளை டிஸ்கோ சாந்தி கவனித்து வந்தார்.
இந்த நிலையில் தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள டிஸ்கோ சாந்தி தான் தற்போது வருமானம் இன்றி வாழ்ந்து வருவதாகவும், இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டு அந்த பணத்தில் வாழ்ந்து வருவதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: எனது கணவர் உயிரோடு இருந்தபோது நிறைய பேருக்கு பணம் கொடுத்திருந்தார். அவர் இறந்த பிறகு நாங்கள் பணம் கொடுக்க வேண்டியவர்கள் மட்டுமே என் வீட்டிற்கு வந்தார்கள். எங்களுக்கு பணம் தர வேண்டியவர்கள் யாரும் வீட்டு பக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை. எங்களிடம் இருந்த நகை, கார், நிலம் எல்லாவற்றையும் விற்று கடனை அடைத்து விட்டோம். ஒரு காருக்கு தவணை கட்ட முடியாமல் வங்கி திருப்பி எடுத்துக் கொண்டது.
இப்போது என்னிடம் அவர் கட்டிய தாலி மட்டுமே மிச்சம் இருக்கிறது. இரண்டு வீடுகள் உள்ளன அந்த வீட்டு வாடகையை வைத்து காலத்தை ஓட்டுகிறோம். சினிமா துறையில் இருந்து யாரும் எங்களை உயிரோடு இருக்கிறோமா இல்லையா என்று கூட எட்டிப் பார்க்கவில்லை. என்று கூறியுள்ளார்.
டிஸ்கோ சாந்தியின் தங்கை லலிதாகுமாரியும் நடிகை என்பதும், அவர் பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.