'பெத்தி' படத்திலிருந்து வெளியேற நினைத்தேன் ; சிவராஜ்குமார் நெகிழ்ச்சி | 'திரிஷ்யம்' நடிகை புகாரின் பேரில் சக நடிகை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு | கொச்சியில் நடைபெற்ற ஆஷா சரத் இளைய மகள் நிச்சயதார்த்தம் | பிளாஸ்ட் : 25 கோடி வசூல் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கருப்பு : வெளியீட்டிற்கு முன்பு 'டெபிசிட்', பின்பு 'பிராபிட்' | 'மோலிவுட் டைம்ஸ்' படத்தில் மீண்டும் அசத்துவார்களா பிரேமலு பிரண்ட்ஸ்? | ஜூன் 25ல் திரைக்கு வரும் ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | பிளாஷ்பேக்: இயக்குநர் ஏ எஸ் ஏ சாமிக்கு வண்ணத்திரை வாய்ப்பை வழங்கிய வானொலி நாடகம் | ரசிகர்கள் எங்களுக்கு தெய்வம் போன்றவர்கள் : பூஜா ஹெக்டே | ஆடை குறித்து நடிகை பரீனாவின் பளிச் பதில் |

சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு, தமிழ் திரையுலகில் நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் அளித்து சர்ச்சைகளை உருவாக்கியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. ஐதராபாத்தில் உள்ள தெலுங்கு திரைப்பட சேம்பர் முன்பு ஸ்ரீரெட்டி அரை நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் செய்து இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக குற்றம் சாட்டினார்.
அதன் பிறகு கடந்த சில ஆண்டுகளாக அமைதியாக இருந்த ஸ்ரீ ரெட்டி தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை கூற தொடங்கிவிட்டார். இந்த முறை நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக களமிறங்கியுள்ளார். கீர்த்தி சுரேஷை சிரஞ்சீவி காதலிப்பதாக ஸ்ரீ ரெட்டி கூறி உள்ளார்.
சமீபத்தில் 'போலா சங்கர்' படத்தின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கீர்த்தி சுரேஷின் கையை பிடித்து கொண்டு சிரஞ்சீவி பேசும் போது இந்தப் படத்தில் மட்டும் தான் கீர்த்தி தங்கையாக நடித்து உள்ளார். அடுத்த படத்தில் அவரை ஹீரோயின் ஆக சம்மதிப்பதாகவும் சிரஞ்சீவி கலகலப்பாக கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.
இப்போது இது குறித்து நடிகை ஸ்ரீரெட்டி தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்து உள்ளார். அதில், "மகள் வயது உள்ள நடிகை மீது ஏன் இப்படி மோகம் கொள்கிறார். லட்சக்கணக்கானோர் முன்னிலையில் இந்த மாதிரி அநாகரிகமான பேச்சு எப்படி சாத்தியம். இந்த காம ஜோக்குகளை எப்படி கூற முடியும்" என்றார்.
இதற்கு சிரஞ்சீவி ரசிகர்கள் அவர் வெறும் நகைச்சுவை உணர்வாக தான் கூறினார். சினிமாவை தாண்டி கீர்த்தியை தனது மகளாகவே சிரஞ்சீவி பார்க்கிறார் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.




