தமிழக அரசு விருது பெற்ற சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான், கீர்த்தி சுரேஷ் | சினிமாவை போன்று விளம்பரங்களிலும் சம்பாதிக்கும் தமன்னா | நானியின் ‛தி பாரடைஸ்' படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் | சிக்கிரி சிக்கிரி பாடலுக்கு சொந்தமாக நடன அசைவை வெளிப்படுத்திய ராம்சரண் | துல்கர் சல்மானின் 41வது படத்தில் இணைந்த ஜெகபதிபாபு | மூத்த மகனும் டைரக்ஷனில் இறங்குகிறார் ; பிரித்விராஜின் அம்மா தகவல் | படப்பிடிப்பில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய மிருணாள் தாக்கூர் | 24வது வருட காதலர் தினம் : ஜெனிலியாவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்த கணவர் | பிரேமம் ரீ ரிலீஸ் : முதல் வரவேற்பை இப்போதும் பெறுமா? | திருமண வீடியோ உரிமை : வேண்டாமென்று மறுத்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா? |

சினிமாவில் நாட்டுப்புற பாடல்கள் பாடி பிரபலமானவர் அந்தோனிதாசன். சில படங்களில் நடித்தும் இருக்கிறார். அந்தோணிதாசன் மனைவியின் தங்கை தான் சூப்பர் சிங்கர் பிரபலமலான ராஜலெட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அந்தோணிதாசன், ‛‛இந்த காலத்தில் பாடல்களை எழுதிய பாடகர்களின் தகவல்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன. பாடுகிறவர்களும் இந்த பாடலை எழுதியவர்கள் இன்னார் தான் எழுதினார்என்று சொல்வதில்லை. எங்களுடைய அடையாளங்களை வாங்கி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
என் மனைவி எழுதிய பாடலை தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செந்தில் மற்றும் ராஜலெட்சுமி பாடியுள்ளனர். அந்த பாடல் பாடியதன் மூலம் பாராட்டுகளையும் புகழையும் பெற்ற ராஜலெட்சுமி எந்த இடத்திலும் அந்த பாடலை எழுதியது தனது சகோதரி தான் என்று கூறவில்லை. இதனால், அந்த பாடலே செந்தில் - ராஜலெட்சுமியுடையது என்றாகிவிட்டது என்று வருத்தத்துடன் பேசி உள்ளார்.