சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கன்னட திரைப்பட நடிகையான ராதிகா ப்ரீத்தி, தமிழ் சின்னத்திரையில் பூவே உனக்காக சீரியலின் மூலம் அறிமுகமானார். பூவரசி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட அவர், சீரியலை விட்டு திடீரென விலகினார். தொடர்ந்து அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பதாகவும், அதனால் தான் சீரியல்களில் இனி நடிக்க மாட்டேன் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், ராதிகா ப்ரீத்தி தற்போது நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்று முன்னணி ஹீரோயின்களாக வலம் வரும் ப்ரியா பவானி சங்கர், வாணி போஜன் வரிசையில் ராதிகா ப்ரீத்தியும் இடம்பெற வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.