ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பூரி ஜெகன்னாத். பல சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். அவரது இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து கடந்த வருடம் பான் இந்தியா படமாக வெளிவந்த படம் 'லைகர்'. அப்படம் படுதோல்வி அடைந்து விஜய் தேவரகொன்டாவிற்கு மிகப் பெரும் இறக்கத்தைக் கொடுத்தது. அந்தத் தோல்வியிலிருந்து மீள வேண்டும் என்று இயக்குனர் பூரி ஜெகன்னாத்தும் இருந்தார். சில முன்னணி நடிகர்களிடம் அவர் கதை சொல்லியும் அவர்கள் தயங்கியதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் பூரி ஜெகன்னாத் அவரது இயக்கத்தில் 2019ல் வெளிவந்த 'ஐஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு 'டபுள் இஸ்மார்ட்' எனப் பெயரிட்டுள்ளார்கள். முதல் பாகத்தில் நடித்த ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கப் போகிறார். லிங்குசாமி இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த 'த வாரியர்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்தான் ராம் பொத்தினேனி. அப்படத்தின் தோல்விக்குப் பிறகு தெலுங்கில் பொயப்பட்டி சீனு இயக்கத்தில் ஒரு படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
2019ல் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் ராம் பொத்தினேனி, நபா நடேஷ், நிதி அகர்வால் மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'ஐஸ்மார்ட் ஷங்கர்' படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. பூரிக்கு மற்ற சில முன்னணி நடிகர்கள் கால்ஷீட் கொடுக்கத் தயங்கிய நிலையில் ராம் பொத்தினேனி முன்வந்திருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 'டபுள் இஸ்மார்ட்' படம் 2024ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி வெளியாகும் என்றும் இப்போதே அறிவித்துள்ளார்கள்.




