10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

திரைப்பட பாடலாசிரியர் சினேகன் தனது பெயரில் 'சினேகன்' என்ற அறக்கட்டளை நடத்தி வருகிறார். சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி 'சினேகம்' என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார். இரண்டுக்-கும் உள்ள பெயர் பொருத்தத்தை வைத்து நடிகை ஜெயலட்சுமி தனது பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை திருமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜெயலட்சுமி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. “நன்கொடை பெற்று மோசடி செய்ததாக எந்தப் புகாரும் இல்லை. தெரியாத நபர்களிடம் இருந்து பணம் வசூலிக்கவில்லை. ஆதாரமே இல்லாமல் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்: என்று ஜெயலட்சுமியின் வழக்கறிஞர் வாதிட்டார்.
போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், ஜெயலட்சுமி மீதான பண மோசடி வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார். இதனை ஏற்ற நீதிமன்றம் ஜெயலட்சுமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.




