
கே.ஜி.எப். 3 : படக்குழு தந்த சூப்பர் அப்டேட்
ஏப் 14, 2023
Advertisement
யஷ் நாயகனாக நடிக்க, ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிக்க, பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப்., முதல் மற்றும் இரண்டாம் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதன் 2ம் பாகம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றதை படக்குழு நினைவு கூர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், 1978 - 81 வரை ராக்கி எங்கே இருந்தார்? என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதனால் கேஜிஎப் 3 பட கதை 1978-81 காலக்கட்டங்களில் நடக்கும் படமாக உருவாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இதையடுத்து மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கே.ஜி.எப்., ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். தற்போது 3ம் பாகத்திற்கான திரைக்கதைப்பணியில் பிரசாந்த் நீல் ஈடுபட்டுள்ளார். தற்போது பிரபாஸின் சலார் படத்தை இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல். இந்த பட பணிகள் முடிந்ததும் கே.ஜி.எப் 3 பட பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!