பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
யஷ் நாயகனாக நடிக்க, ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிக்க, பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப்., முதல் மற்றும் இரண்டாம் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதன் 2ம் பாகம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றதை படக்குழு நினைவு கூர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், 1978 - 81 வரை ராக்கி எங்கே இருந்தார்? என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதனால் கேஜிஎப் 3 பட கதை 1978-81 காலக்கட்டங்களில் நடக்கும் படமாக உருவாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இதையடுத்து மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கே.ஜி.எப்., ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். தற்போது 3ம் பாகத்திற்கான திரைக்கதைப்பணியில் பிரசாந்த் நீல் ஈடுபட்டுள்ளார். தற்போது பிரபாஸின் சலார் படத்தை இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல். இந்த பட பணிகள் முடிந்ததும் கே.ஜி.எப் 3 பட பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.