சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பா ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்து ஓடிடி தளத்தில் வெளிவந்த படம் 'சார்பட்டா பரம்பரை'. அப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டனர்.
ஆனால், அந்த அறிவிப்பில் படத்தின் இசையமைப்பாளர் பெயர் எதுவும் இடம் பெறவில்லை. முதல் பாகத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். அவரது பின்னணி இசையும், பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பின் 'எஞ்சாமி' பாடல் விவகாரத்தில் சந்தோஷ் நாராயணன், அறிவு இடையே சர்ச்சை ஏற்பட்டது. அதனால், பா ரஞ்சித் தனது அடுத்த படங்களுக்கு சந்தோஷ் நாராயணனை இசையமைக்க வைக்கவில்லை.
அதற்கடுத்து அவர் இயக்கிய “நட்சத்திரம் நகர்கிறது” படத்திற்கு தென்மா இசையமைத்திருந்தார். தற்போது விக்ரம் நடிக்க இயக்கி வரும் 'தங்கலான்' படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார்.
'சார்பட்டா பரம்பரை 2' படத்தின் அறிவிப்பு வெளியானதுமே அதற்கு, இசையமைப்பாளர்கள் சாம் சிஎஸ் வாழ்த்து தெரிவித்திருந்தார். சந்தோஷ் நாராயணனும் பா.ரஞ்சித், ஆர்யா ஆகியோரை டுவிட்டரில் டேக் செய்து, “வானம் விடிஞ்சிருச்சு காசு டா மேளத்தை,” என பதிவிட்டுள்ளார். பகையை மறந்து இருவரும் மீண்டும் இணைந்து பணி புரிவார்களா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.