லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் அவருடன் ஜாக்கி ஷெராப் , மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க போகிறார் ரஜினிகாந்த்.
இதற்கிடையே ரஜினியின் 170வது படத்தை ஞானவேல் இயக்குவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். 2024ல் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்த சில தகவல் கசிந்துள்ளது.
அதாவது ரஜினி 170 வது படமும் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தை போன்று ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகிறதாம். இதில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக நடிக்கும் ரஜினி, தூக்கு தண்டனைக்கு எதிராக போராடுபவராக நடிக்கிறாராம். தூக்கு தண்டனைக்கு எதிராக அவர் போராடுவது தான் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.