'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

சென்னை: சென்னையில் காமெடி நடிகர் 'ரோபோ' சங்கரின் வீட்டில், சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சென்னை வளசரவாக்கம், லட்சுமி நகர் 11வது தெருவில் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் வீடு உள்ளது. இவர், அஜித்குமார், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் திரைப்படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன், தன் வீட்டில் இரண்டு கிளிகள் வளர்ப்பது குறித்து, சமூக வலைதளத்தில், 'வீடியோ' பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த வனத்துறை அதிகாரிகள், வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டிற்கு நேற்று சென்றனர்.
விசாரணையில், அவர் குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, வீட்டில் அவர் சட்ட விரோதமாக வளர்த்து வந்த இரண்டு கிளிகளை, வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த கிளிகள், கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன. இது குறித்து விசாரணை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.




