Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அவள் அப்படித்தான் 2ம் பாகம் உருவாகிறது

12 டிச, 2022 - 13:19 IST
எழுத்தின் அளவு:
Aval-appadithan-2-sequel-on-the-way

தமிழ் சினிமாவின் டாப் டென் படங்களில் ஒன்று ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான். 1978ல் வெளியான படம் அப்போதே பெண்ணுரிமை பற்றி பேசியது. இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க ருத்ரைய்யாவே முயற்சித்தார். கமல், ரஜினி கால்ஷீட் கிடைக்காததால் கைவிட்டார். அதன்பிறகு பலர் இதன் இரண்டாம் பாகத்தை விஜய்சேதுபதி, சிம்புவை வைத்து எடுக்க முயற்சித்தார்கள். அதுவும் நடக்க வில்லை.

தற்போது ரா.மு.சிதம்பரம் என்பவர் இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார். இயக்குநர் ஆதவனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த இவர் குறும்படங்கள் , விளம்பரப் படங்கள், ஆவணப் படங்கள் இயக்கியவர். படத்திற்கு வேதா செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார், அரவிந்த் சித்தார்த் இசை அமைக்கிறார்.

இந்த படத்தில் சுயமரியாதை கொண்ட மஞ்சுவாக நடித்திருப்பவர் சினேகா பார்த்திபராஜா. திருப்பத்தூரைச் சேர்ந்த இவர் ஒரு வழக்கறிஞர். இந்தியாவில் முதன்முதலாக மதம், ஜாதியற்றவர் என்று தனக்கு ஜாதிமறுப்புச் சான்றிதழ் வாங்கியவர். இவரது கணவர் பார்த்திபராஜா நாடகக் குழு வைத்துள்ளார. கணவர் குழுவில் இணைந்து நடித்த அனுபவம் சினேகாவுக்கு உண்டு.

படத்தின் நாயகனாக நடித்துள்ளவர் அபுதாகிர். இவர்கள் தவிர சுமித்ரா, அனிதாஸ்ரீ, சுதாகர், வெங்கட்ரமணன் ,தனபால், தொல்காப்பியன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை யுன் ஃப்ளிக்ஸ் நிறுவனம் சார்பில் செய்யது அபுதாகிர் தயாரித்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் ரா.மு.சிதம்பரம் கூறியதாவது: படத்தின் நாயகி ஓர் ஆசிரியை. கற்பிக்கும் பணியை அவள் வேலையாக இல்லாமல் விருப்பமாகச் செய்து வருகிறாள். ஒரு சனிக்கிழமையன்று வேலைக்குச் செல்கிற அவள், வழக்கம்போல அன்று மாலை வீடுதிரும்பவில்லை. நேரம் நகர்கிறது. இரவு 10 மணி ஆகிறது. இன்னும் வீடு வந்து சேரவில்லை. அதற்கு மேல் நகரும் ஒவ்வொரு நிமிடமும் அந்தக் குடும்பத்தினருக்குப் பெரிய பதற்றத்தை ஏற்படுத்துகிறது. கணவர், மாமியார்,செய்தி கேட்டு வந்திருந்த அவளின் பெற்றோர் என அனைவரும் செய்வதறியாது தவிக்கிறார்கள். அக்கம்பக்கம் செய்தி பரவுகிறது.

கணவன் எவ்வளவோ இடங்களுக்கு அலைந்து சென்று தேடியும் கிடைக்கவில்லை.பொழுதும் விடிகிறது. அதிகாலை 6 மணிக்கு அவள் வந்து சேர்கிறாள். இரவு முழுக்க எங்கே சென்று இருந்தாள்? அனைவர் முகத்திலும் இதே கேள்விக்குறிகள். ஆனால் எதற்கும் பதில் அளிக்காமல் அனைவரையும் கடந்து, அவர்களது கேள்விகளைப் புறந்தள்ளிவிட்டு வீட்டுக்குள் நுழைகிறாள். இரவு பொழுது கழிந்ததைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் மிகச் சாதாரணமாக இருக்கிறாள்.இதைக் கண்ட அனைவருக்கும் அதிர்ச்சி ஆச்சரியம். அதற்குப் பிறகு அவளுக்கும் அவள் கணவருக்கும் ஈகோ யுத்தம் தொடங்குகிறது. ஆணவம் தூண்டப்பட்ட இரு மனங்களும் கூர் தீட்டிக் கொண்டு மோதிக் கொள்கின்றன.

வழக்கமான ஆணாதிக்க மனம் கொண்ட அவனும் அதற்குப் பணியாத அவளும் முரண்பட்டு விலகல் கொண்டவர்களாக மாறுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணிக்கு வீடு வந்தவள் மறு நாள் திங்கட்கிழமை காலை ஒரு முடிவு எடுக்கிறாள். அது கட்டுப் பெட்டித்தனமும் அல்ல கட்டுடைத்தலும் அல்ல. தனது பெண் என்கிற சுயத்தை இழக்காமல் எடுக்கும் முடிவு. அதற்குள் என்ன நடக்கிறது? அவள் என்ன முடிவெடுக்கிறாள்? என்பதுதான் இப்படத்தின் கதை செல்லும் பாதை.

மனித மனம் ஆணவத்தின் சீண்டல்களால் வெளிப்படும் குரூர தருணங்களையும் அதன் அசைவுகளையும் இந்தப் படத்தில் அழகாகக் காட்டியுள்ளோம். நடித்துள்ளவர்களும் பாத்திரங்களின் மன இயல்புகளை நடிப்பாக வெளிப்படுத்தி உள்ளார்கள். இந்தப் படத்தை நாங்கள் பத்தே நாளில் எடுத்து முடித்தோம். சரியான திட்டமிடல் இருந்ததால் இது சாத்தியமானது. இந்தப் படம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
3 நிமிட டீசருடன் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' அறிவிப்பு3 நிமிட டீசருடன் 'ஜிகர்தண்டா டபுள் ... லவ் டுடே வெற்றி எதிர்பார்த்ததுதான்: பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே வெற்றி எதிர்பார்த்ததுதான்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

12 டிச, 2022 - 16:45 Report Abuse
Sunil Kumar 0 ...........
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in