காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் | மம்முட்டி வாங்கி கொடுத்த 'ஹியரிங் எய்டு' கருவியை கழட்டி வீசிய தொழிலாளி | 'டூரிஸ்ட் பேமிலி' பாணி கதையில் ஹிந்தியில் நடிக்கும் பிரியாமணி | நானாக வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் இவர்தான் ; மிருணாள் தாகூர் | பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை | சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் |

தமிழ் சினிமாவின் எவர் கிரீன் காமெடி நடிகர்களில் கவுண்டமணியும் ஒருவர். தொடர்ச்சியாக காமெடி வேடங்களில் நடித்தவர் ஒருக்கட்டத்தில் சினிமாவை விட்டு சற்று விலகியிருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் சில ஆண்டுகளுக்கு முன் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, 49 ஓ ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்தார். அதன்பிறகு சில படங்களில் கேரக்டர் ரோலில் நடித்தார். கடந்த 6 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காதவர் தற்போது பழனிச்சாமி வாத்தியார் என்ற படத்தில் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியராக நடிக்கப் போகிறார். இந்த படத்தை பேயை காணோம் என்ற படத்தை இயக்கிய செல்வ அன்பரசன் இயக்குகிறார். வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. முக்கியமாக, இந்த பழனிச்சாமி வாத்தியார் படத்தில் கவுண்டமணியுடன் தனுஷ் அல்லது சிவகார்த்திகேயனை கெஸ்ட் ரோலில் நடிக்க வைப்பதற்கான முயற்சிகளும் நடக்கின்றன.




