தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
‛சண்டிவீரன்' படத்தை அடுத்து நடிகர் அதர்வா, இயக்குனர் சற்குணம் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‛பட்டத்து அரசன்'. ஆஷிகா ரங்கநாத் நாயகியாக நடிக்க, ராஜ்கிரண், ராதிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். சமீபத்தில் இதன் முதல்பார்வை வெளியிடப்பட்டது. கிராமத்து கதையில் உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வந்தது. இந்நிலையில் தற்போது இந்த படம் சென்சார் சான்றே பெற்றுவிட்டது. படத்திற்கு சென்சாரில் யு சான்று கிடைத்துள்ளதாகவும், நவ., 25ல் படம் திரைக்கு வருவதாகவும் படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.