தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

தமிழகத்தில் நம்மாழ்வார் போன்று கர்நாடகாவில் புகழ்பெற்ற இயற்கை விவசாயி சுபாஷ் பாலேகர். அவரது இயற்கை விவசாய நுட்பம் ஆந்திரா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பல ஆண்டுகளாக அரசாங்க ஆதரவைப் பெற்றுள்ளது. மஹாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் கேரளாவும் இதனை பின்பற்றி வருகிறது.
தற்போது சுபாஷ் பாலேகரின் வாழ்க்கை கன்னடத்தில் சினிமாவாக தயாராகிறது. இதில் சுபாஷ் பாலேகராக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். சுற்றுசூழல் ஆர்வலரான விஜய் ராம் இயக்குகிறார். பிரகாஷ்ராஜ் சுபாஷ் பாலேகரை குருவாக ஏற்று சென்னை மற்றும் பெங்களூரில் இயற்கை விவசாயம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.




