ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ் குமார் தனது 46வது வயதில் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவர் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'கந்தாட குடி'. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தபோதுதான் புனித் மரணம் அடைந்தார். அவர் நடிக்க வேண்டிய மீதமுள்ள காட்சிகளை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சரிசெய்தும், காட்சிகளை மாற்றியும் இந்த படத்தை முடித்துள்ளனர்.
இந்த படம் கர்நாட மாநிலத்தின் இயற்கை வளத்தை பாதுகாப்பது தொடர்பான படமாக உருவாகி உள்ளது. எனவே இந்த படத்தின் டீசரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட வேண்டும் என்று புனித் ராஜ்குமார் விரும்பி இருக்கிறார். இந்த தகவலை அவரின் மனைவி அஸ்வினி வெளியிட்டிருந்தார். இது மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. படத்தின் டீசரை பார்த்து விட்டு அதுகுறித்து மோடி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
"உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் அப்பு(நடிகர் புனித் ராஜ்குமார்) வாழ்கிறார். அவர் புத்திசாலித்தனமான ஆளுமை, ஆற்றல் நிறைந்தவர் மற்றும் அவர் ஒப்பற்ற திறமையால் ஆசீர்வதிக்கப்பட்டவர். கந்தாட குடி என்பது இயற்கை அன்னைக்கும், கர்நாடகாவின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான காணிக்கையாகும். இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.