Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சென்னையில் சினிமா தயாரிப்பாளர் படுகொலை : உடலை பையில் கட்டி சாலையில் வீசிய கொடூரம்

04 செப், 2022 - 11:44 IST
எழுத்தின் அளவு:
Cinema-producer-murder

சென்னையில் சினிமா தயாரிப்பாளர் ஒருவரை கொலை செய்து, உடலை பிளாஸ்டிக் பையில் கட்டி சாலையோரம் வீசிச் சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை, விருகம்பாக்கம், சின்மயா நகர் பகுதியில், நேற்று காலை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விருகம்பாக்கம் கால்வாயை ஒட்டி சாலையோரம் கிடந்த கறுப்பு நிற பிளாஸ்டிக் பையில், முழுமையாக கட்டப்பட்ட நிலையில், ஒருவரது உடல் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பையை பிரித்து பார்த்தபோது, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டு, உடலில் காயங்களுடன், 60 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் இருந்தது.உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் கொலை குறித்து விசாரித்தனர்.

இந்த நிலையில், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் 'தந்தையை காணவில்லை' என, ஒருவர் புகார் அளித்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் அழைத்து வரப்பட்டார். அப்போது, உடல் அவரது தந்தையுடையது என, அவர் அடையாளம் காட்டினார்.

முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாவது: கொலை செய்யப்பட்டவர், ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணபுரம், 3வது தெருவைச் சேர்ந்த பாஸ்கர், 65. இவரது மனைவி பாக்கியம்மாள், 62. இவர்களுக்கு கார்த்திகேயன், 40, கவுசிக், 36, என, இரண்டு மகன்கள் உள்ளனர். கொலை செய்யப்பட்ட பாஸ்கர், கட்டுமான நிறுவனம் நடத்தி வந்ததுடன், 1997ல் ராம்கி நடித்த 'சாம்ராட்'மற்றும் 'ஒயிட்'உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இவர், நேற்று முன்தினம் இரவு, விருகம்பாக்கத்தில் இருப்பதாகவும், சென்னையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று வீட்டிற்கு வருவதாகவும், தன் மகனிடம் மொபைல் போனில் பேசியுள்ளார். சிறிது நேரத்திற்குப் பின் தொடர்பு கொண்டபோது போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.இதனால், அதிர்ச்சியடைந்த மகன்கள், பாஸ்கரை தேடி பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் 'ஆன்லைன்' வாயிலாக புகார் அளித்துள்ளனர்.

மேலும், பாஸ்கர் பயன்படுத்திய கார், உடல் கிடந்த அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில், வாடகைக்கு வசித்து வந்த நபர் ஒருவர், வீட்டை பூட்டி மாயமாகியுள்ளார்.எனவே, பாஸ்கர், குறிப்பிட்ட வீட்டில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. அது மட்டுமின்றி, நிதி நிறுவனங்களில் பணம் பெற்று பாஸ்கர், சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

பாஸ்கர் கொலை செய்யப்பட்ட பின், அவரது உடல் கறுப்பு நிற பிளாஸ்டிக் கவரில் கட்டப்பட்டு, கூவத்தின் அருகே வீசப்பட்டுள்ளார். அவரது ஏ.டி.எம்., கார்டில் இருந்து அதிகமான தொகையும் எடுக்கப்பட்டது தெரிய வந்தது. பாஸ்கரன் கடைசியாக யார் யாரிடம் எல்லாம் பேசினார்; கொலைக்கு காரணம் முன் விரோதமா அல்லது பணம் கொடுக்கல் - வாங்கல் தகராறா என, பல்வேறு கோணங்களில், மூன்று தனிப்படைகள் அமைத்து, விருகம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
சாதாரண மனிதனின் கோபம்தான் 'சினம்' : அருண் விஜய்சாதாரண மனிதனின் கோபம்தான் 'சினம்' : ... சும்மா ஹாலிவுட் படம் போல் 'கேப்டன்' இருக்கும் : ஆர்யா சும்மா ஹாலிவுட் படம் போல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05 செப், 2022 - 17:30 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பிரபலமான பாலியல் தரகர் கணேஷ் - ஹா ஹா ஹா .. மாமாவுக்கு புது பெயர். அவன் தான் இவரை பொம்பளை விஷயத்திலே போட்டு தள்ளிட்டதா போலீஸ் சொல்லுதே. வயசுக்கேத்த விளையாட்டு ஆடணும். இல்லைன்னா இப்படித்தான் விபரீதமான முடிவு ஏற்படும்.
Rate this:
raja - Cotonou,பெனின்
05 செப், 2022 - 14:46 Report Abuse
raja சட்டம் ஒழுங்கு சூப்பரா தமிழகத்தில் இருக்குன்னு நம்ப நம்பர் ஒன்னு விடியாமூஞ்சி கோமாளி பிரின்சிபால் பெருமையா சொல்லிக்கிட்டு திரியிறான்...
Rate this:
ngopalsami - Auckland ,நியூ சிலாந்து
05 செப், 2022 - 09:58 Report Abuse
ngopalsami சைக்கிளிங் மற்றும் கட்டுக்கோப்பான உடம்பு மட்டும் இருந்தால் போதாது. திறமையான ஆளுமை வேண்டும்.
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
05 செப், 2022 - 06:29 Report Abuse
Mani . V மிஸ்டர். சைக்கிளிங்க் ஆபீஸர், இந்த செய்தியை பார்த்தீர்களா?
Rate this:
04 செப், 2022 - 12:59 Report Abuse
BKrishna Murthy.T தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... விடியா அரசுக்கு வாழ்த்துக்கள்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in