காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் | மம்முட்டி வாங்கி கொடுத்த 'ஹியரிங் எய்டு' கருவியை கழட்டி வீசிய தொழிலாளி | 'டூரிஸ்ட் பேமிலி' பாணி கதையில் ஹிந்தியில் நடிக்கும் பிரியாமணி | நானாக வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் இவர்தான் ; மிருணாள் தாகூர் | பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை | சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் |

ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்தது. தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்தான் அதற்குக் காரணம். நீதிமன்ற வழக்கு, தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளைக் கடந்து இப்போது சுமூக முடிவுக்கு வந்துள்ளார்கள். அடுத்த மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாக உள்ளது.
சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இதற்காக அரங்கு அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகி பரபரப்பாக நடந்து வருகின்றன. அடுத்த மாதம் கமல்ஹாசன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பிக்கலாம் எனத் தெரிகிறது. அதனால், வேறு ஊர்களில் படப்பிடிப்பை வைத்தால் கமல்ஹாசன் வந்து போக சிக்கலாக இருக்கும் என சென்னையிலேயே அரங்கு அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பாக அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரிகிறது. வெளியாட்கள் உள்ளே நுழைய முடியாதபடி படப்பிடிப்பு நடத்த உள்ளார்களாம்.




