இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
திருச்சி : திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் அணி 4 தங்கம், 2 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தி உள்ளனர்.
திருச்சியில், 47வது மாநில அளவிலான துப்பாக்கி சூடும் போட்டி, கடந்த 24ம் தேதி முதல், கே.க.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் நடைபெற்று வருகிறது. கடந்த 27ம் தேதி, மாஸ்டர் பிரிவில், 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் என மூன்று சுடுதளத்திலும், பிஸ்டல் வகை போட்டிகளில், நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டு, இலக்கை நோக்கி சுட்டார்.
இதில், நடிகர் அஜித் குமார் அணி சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவு, ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் பிரிவு, 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவு, ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவு ஆகியவற்றில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் பிஸ்டல் ஆண்கள் பிரிவு, ஸ்டாண்டர்ட் பிஸ்டல் ஆண்கள் பிரிவு ஆகியவற்றில் வெண்கல பதக்கமும் என 6 பதக்கங்களை வென்றது.
அஜித்குமார் உட்பட மூன்று பேர் கலந்த கொண்ட போட்டியில் புள்ளிகள் அடிப்படையில் பதக்கங்களை வென்று உள்ளதாக, ரைபிள் கிளப் தரப்பில் தெரிவித்தனர். இதற்கான பரிசளிப்பு விழா நாளை (31ம் தேதி) நடைபெற உள்ளது.