ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்தில் மீனாவின் கணவர் மறைவு குறித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில் மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய வேதனையைக் கொடுத்தது. நுரையீரல் பிரச்சனை காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். வாழ்க்கை மிகவும் குரூரமானது என்பதை இந்த இறப்பின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. மீனாவையும் அவரது மகள் நைனிகாவையும் நினைத்து என் மனசு வலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள குஷ்பு, இன்னொரு பதிவில் இந்த விஷயத்தில் ஊடகங்கள் சற்று பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மீனாவின் கணவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நுரையீரல் பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக அவர் இறந்துள்ளார். அதனால் தயவு செய்து அவர் கொரோனாவால் இருந்ததாக யாரும் தவறான தகவலை வெளியிட்டு மக்களை அச்சுறுத்த வேண்டாம். அதோடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது அவசியம் தான் இருப்பினும் தயவு செய்து மக்களை பயமுறுத்தும் வகையில் செய்திகள் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்து இருக்கிறார் குஷ்பு.




