10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

கீதா கோவிந்தம் படம் மூலம் தெலுங்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ராஷ்மிகா, சமீபத்தில் வெளியான புஷ்பா படம் மூலம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை சொந்தக்காரராக மாறியுள்ளார். குறிப்பாக அவர் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விக்கு எந்தவித தயக்கமும் இல்லாமல் பதிலளிப்பது, பொதுவெளியில் அவர்களுடன் எந்த பாகுபாடும் காட்டாமல் புகைப்படம் எடுத்துக்கொள்வது என எளிமையான ஒரு நடிகையாக காட்சியளிப்பதால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரை பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் கூடுகின்றனர்.
அப்படி சமீபத்தில் ஒரு படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியில் நடிப்பதற்காக தனது கேரவனில் இருந்து இறங்கி வந்தார் ராஷ்மிகா. அப்போது அங்கே கூடியிருந்த புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்தபடியே அங்கிருந்த ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் ராஷ்மிகா. ஒருசில ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
அப்படி ஒரு ரசிகர் ராஷ்மிகாவுடன் புகைப்படம் எடுக்க முன்னால் வந்தபோது ராஷ்மிகாவின் பாதுகாவலராக இருந்த ஒரு பவுன்சர் அவரை தள்ளிவிட முயற்சி செய்தார் ஆனால் கண்களாலேயே அந்த பவுன்சரை ஒதுங்கி இருக்குமாறு உத்தரவிட்ட ராஷ்மிகா முகத்தில் எந்தவித மாறுபாடும் காட்டாமல் புன்சிரிப்புடன் அந்த ரசிகருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.




