கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் |

தமிழ்த் திரையுலகின் நம்பர் 1 நடிகையான நயன்தாராவுக்குக் கடந்த வாரம் சென்னையில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகும் நயன்தாரா சினிமாவில் நடிக்கப் போகிறார். ஆனாலும், அவர் புது கண்டிஷன்களைப் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைப் பெரும்பாலும் தெலுங்கு ஊடகங்கள்தான் குறிப்பிட்டு எழுதியுள்ளன.
திருமணத்திற்குப் பிறகு நயன்தாரா இன்னும் எந்த ஒரு புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. அதற்குள் எப்படி, இப்படி ஒரு புதிய நிபந்தனை போட்டுள்ளார் என்று எழுதுகிறார்கள் எனத் தெரியவில்லை என தமிழ்த் திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள்.
கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடிக்க மாட்டேன், தொடர்ச்சியாக படங்களில் நடிக்க கால்ஷீட் தர மாட்டேன் ஆகியவைதான் நயன்தாரா விதித்துள்ள புதிய நிபந்தனைகள் என்கிறார்கள். நயன்தாரா தற்போது ஷாரூக்கானுடன் 'ஜவான்' என்ற ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இன்னும் எடுக்க வேண்டியுள்ளது. ஹிந்திப் படங்களில் காதல் காட்சிகள் பொதுவாகவே நெருக்கமாகத்தான் இருக்கும். அப்படியிருக்க திருமணத்திற்குப் பிறகு அப்படி நடிக்க மாட்டேன் என நயன்தாரா எப்படி சொல்லியிருப்பார் என்றும் திரையுலகில் கேள்வி எழுப்புகிறார்கள்.




