கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை | இது மட்டும் நடந்தால் பிசாசு 2 படத்தை நானே ரிலீஸ் செய்வேன் : ஆண்ட்ரியா | கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது : பாலகிருஷ்ணாவுக்கு கவுரவம் | ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! |

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஹீரோக்களில் முக்கியமானவர் ஹரி. 'சாமி, சிங்கம்' என மாஸ் ஹீரோக்களின் சினிமாவை வேறு ஒரு திசைக்குக் கொண்டு சென்றவர். தற்போது தனது மைத்துனர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள 'யானை' படத்தை இயக்கி முடித்துள்ளார். ஜுன் 17ம் தேதியன்று இப்படம் வெளியாக உள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. அதில் இயக்குனர் ஹரி, அருண் விஜய், பிரியா பவானி சங்கர் மற்றும் படத்தில் நடித்துள்ள பலரும் கலந்து கொண்டனர். பத்திரிகையார் சந்திப்பில் நிருபர் ஒருவர், யானைக்கு கோபமும் வரும், மதமும் பிடிக்கும். இந்தப் படத்திற்கு யானை எனப் பெயர் வைத்திருப்பதால் படத்தின் நாயகனுக்கு கோபம் வருகிறதா, மதம் பிடித்தவர் போல நடந்து கொள்கிறாரா எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குக் கொஞ்சம் எமோஷனலாகப் பதிலளித்தார் இயக்குனர் ஹரி. படத்தில் இருக்கும் ஆக்ஷன் காட்சிகளைப் பற்றிப் பேசும் போது ஹீரோ அடிப்பதைப் பற்றிக் குறிப்பிடுகையில் ஒரு வேகத்தில் கெட்ட வார்த்தை ஒன்றை உதிர்த்துவிட்டார். அந்த வார்த்தையைக் கேட்டதும் மேடையில் இருந்தவர்களுக்கும் எதிரில் இருந்தவர்களுக்கும் அதிர்ச்சியானது.
எல்லாரும் சிரிப்பதைப் பார்த்துவிட்டு இயக்குனர் ஹரி, “என்ன நான் மனசுல நினைச்சதை வெளிய சொல்லிடடேனா,” என சிரித்து சமாளித்துவிட்டார்.




