விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி! | துல்கர் சல்மான் உடன் பிரச்னையா : மனம் திறந்தார் டொவினோ தாமஸ் | உதவி செய்யுங்கள் : துரந்தர் படக்குழுவுக்கு பாகிஸ்தான் மக்கள் கோரிக்கை | 5 மணிநேரம் ரசிகர்களுடன் தொடர்ந்து புகைப்படம் எடுத்த மம்முட்டி | எல்ஐகே படத்தின் கதைக்களம் குறித்த தகவல் இதோ | தேர்தல் நேரத்தில் களமிறங்கும் நட்டியின் ‛டிஎன் 2026' படம் | 50 கோடியை கடந்த ‛யூத்' | லீடர் இப்படி இருந்தால் வீடும், நாடும் நன்றாக இருக்கும் : ஐஸ்வர்யா | 2026 சட்டசபை தேர்தல் : களம் இறங்கும் சினிமாகாரர்கள் | தெலுங்கு இயக்குனருடன் இணையும் பிரதீப் ரங்கநாதன் |

கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வரும் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஜூன் மாதம் 9ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்ய திட்டமிட்டனர் . இதற்காக திருப்பதி தேவஸ்தானத்தில் அனுமதியும் வாங்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நயன்தாரா, விக்னேஷ் சிவன் குடும்ப உறுப்பினர்கள் 150 பேர் வரை திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டதால் அதற்கு தேவஸ்தானம் அனுமதி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் தற்போது திருப்பதியில் நடக்க இருந்த தங்களது திருமணத்தை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் நடத்த விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் முடிவெடுத்துள்ளனர். இந்த இடமாற்றம் குறித்த அழைப்பிதழ் ஒன்று வைரலாகி வருகிறது.
அதோடு இந்த திருமண நிகழ்ச்சியில் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பதாக கூறப்படுகிறது. மேலும் நயன்தாராவின் திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற்றாலும் சென்னையில் பிரம்மாண்டமான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவதற்கு அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




