ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

நயன்தாரா தயாரித்து நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் இருவிதமான விமர்சனங்களை பெற்றபோதும் வசூல் ரீதியாக எல்லோருக்கும் திருப்பதியை கொடுத்துள்ளது. இதற்கு நன்றி சொல்லவும், விரைவில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு ஆசி பெறவும் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஷீரடி சென்று சாய்பாபாவை தரிசனம் செய்தார்.
இருவரும் சாய்பாபா கோவிலுக்கு சென்று பாபா தரிசனம் முடிந்த பிறகு அங்குள்ள மண்டபத்தில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். ரசிகர்கள் தொல்லை இல்லாததால் அவர்கள் பலமுறை கோவிலை சுற்றி வந்துள்ளனர்.
அடிப்படையில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவராக நயன்தாரா, பிரபு தேவாவை காதலித்தபோது இந்து மதத்திற்கு மாறினார். அதன் பிறகு இந்து மதத்தின் தீவிர பக்தையாக மாறி இருக்கிறார். திருப்பதிக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்து பெண்ணாக வாழ்வதில் அவர் முழு திருப்தியும், அமைதியும் அடைந்திருப்பதையே இது காட்டுகிறது. என்கிறார்கள்.




