ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் ஜீவிதா. நடிகர் டாக்டர் ராஜசேகரை திருமணம் செய்து கொண்டு ஐதராபாத்தில் வசித்து வருகிறார். தற்போது இவர்களின் மகள்கள் இருவரும் நடித்து வருகிறார்கள். ஜீவிதாவும், ராஜசேகரும் இணைந்து படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜீவிதாவும், ராஜசேகரும் கருட வேகா என்ற படத்தை தயாரிக்க ஆந்திராவை சேர்ந்த ஜியோ ஸ்டார் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 26 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளனர். கடனை திருப்பி செலுத்த அவர்கள் கொடுத்த காசோலை பணமின்றி திரும்பி உள்ளது. இதை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கோட்டீஸ்வர ராஜூ, நிர்வாக இயக்குனர் ஹேமா ஆகியோர் ஜீவிதா மீது மோசடி வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் ஜீவிதாவுக்கு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இது குறித்து ஜீவிதா கூறியிருப்பதாவது: என் மீது தொடரப்பட்டுள்ள செக் மோசடி வழக்கே மோசடியானது. என் மீது எந்த தவறும் இல்லை. என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதனை சட்டப்படி சந்திப்பேன். என்று கூறியிருக்கிறார்.