பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. ஹிந்தியிலும் நடிக்க தொடங்கி உள்ளார். தற்போது அவரது நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் படங்கள் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதுதவிர யசோதா படத்தில் நடித்து வருகிறார். தனது படங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்.
இந்நிலையில் சமூகவலைளத்தில் ரசிகர்கள் உடன் கலந்துரையாடினார். அப்போது ஒருவர் உங்களின் முதல் சம்பளம் எவ்வளவு என கேட்டார். அதற்கு, ‛‛நான் பத்தாம் வகுப்போ, 11ம் வகுப்போ படித்தபோது நிகழ்ச்சி ஒன்றில் வரவேற்பு பெண்ணாக பலமணிநேரம் பணிபுரிந்தேன். அதற்காக ரூ.500 சம்பளம் பெற்றேன். அதுதான் எனது முதல் சம்பளம்'' என தெரிவித்துள்ளார்.




