ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்தியத் திரையுலகத்திலிருந்து இரண்டு படங்கள் அடுத்தடுத்த நாட்களில் பான்--இந்தியா படங்களாக வெளியாகி வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது. விஜய் நடித்த தமிழ்ப் படமான 'பீஸ்ட்', யஷ் நடித்த கன்னடப் படமான 'கேஜிஎப் 2' இரண்டு படங்களுமே இந்த வார வெளியீடுகளாக அமைந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே, கன்னட மீடியாக்களில் 'கேஜிஎப் 2' படத்தின் பிரத்யேகக் காட்சியை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. அது மட்டுமல்ல படத்தைப் பார்த்து வியந்து போன ரஜினிகாந்த், இயக்குனரை நேரில் பார்த்து பாராட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
அதே போல 'பீஸ்ட்' படத்தையும் ரஜினிகாந்த் பார்த்ததாகவும் ஆனால், படத்தைப் பார்த்து எந்த கமெண்ட்டும் சொல்லாமல் போய்விட்டதாகவும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. 'பீஸ்ட்' படத்தை இயக்கிய நெல்சன் தான் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில கன்னட ஊடகங்கள் அதற்குள் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகிறாரா என செய்திகளை வெளியிட ஆரம்பித்துவிட்டன. பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். அதற்கடுத்து ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார்.