ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

சமூகவலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. திரைப்பிரபலங்கள் குறிப்பாக நடிகைகள் சமூகவலைதளங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அதேசமயம் பிரபலங்களின் சமூக வலைத்தள கணக்குகள் ஹேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டா கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "எனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா அல்லது முடக்கப்பட்டுள்ளதா என தெரியவில்லை . விரைவில் எனது கணக்கை மீட்டு தர இன்ஸ்டாக்ராமை கேட்டுக்கொள்கிறேன்'' என கூறியிருந்தார்.
தற்போது அவரின் இன்ஸ்டா கணக்கு மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி விட்டது என கூறி நன்றி தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.




