பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

ஒரு படம் வெளியாகி குறைந்த பட்சம் 30 நாட்கள் கழித்துத்தான் அந்த படத்தை ஓடிடிக்கு கொடுக்க வேண்டுமென வினியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்பந்தம் போடுவது பழக்கம். ஆனால் கொரோனா தாக்கம் கடந்த இரண்டு வருடங்களாக அனைத்து நடைமுறைகளையும் புரட்டிப் போட்டு விட்டது.
அந்தவகையில் திரையரங்குகள் மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்ததால் பல தயாரிப்பாளர்கள் தங்களது படத்தை ஓடிடி தளங்களில் நேரடியாகவே வெளியிட்டனர். ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளர்களுடன் மோதுவதைவிட அந்த படத்தில் நடித்த சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர். அவர்களது அடுத்த படம் தியேட்டரில் வெளியாகும் போது ஒத்துழைப்பு கொடுக்க கூடாது என தீர்மானம் இயற்றும் அளவிற்கு செல்கின்றனர்.
அந்த வகையில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சல்யூட் என்கிற படம் நேரடியாகவே ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தை துல்கர் சல்மானே தயாரித்தும் இருந்தார். இதைத்தொடர்ந்து இனி துல்கர் சல்மான் படங்களை தியேட்டர்களில் வெளியிடுவதற்கு ஒத்துழைப்பதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது மேலும் மார்ச் 31 (நேற்று) நடைபெறும் பொதுக்குழுவில் இதுபற்றி விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் நேற்று கூடிய பொதுக்குழுவில் துல்கர் சல்மான் சார்பாக இந்தப்படத்தை எதனால் ஓடிடியில் வெளியிட நேர்ந்தது என்பது குறித்து திருப்திகரமான விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் அதனால் அவர் மீது விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.