300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் காமெடியனாக நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். அதோடு பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு சமீப காலமாக சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. அதன் காரணமாக யூடியூப் சேனல்களில் நடிகர்கள் குறித்த அந்தரங்க விஷயங்களை வெளியிட்டு வருகிறார். இப்படி அனைத்து நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் குறித்து அவதூறு செய்திகளை வெளியிட்டு வருவதால் அவர் மீது சினிமா உலகினர் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.
சில நடிகைகள் அவரை தொடர்புகொண்டு அவருடன் மோதலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து சினிமாத்துறையினர் குறித்த சர்ச்சை செய்திகளை அவர் வெளியிட்டு வருவதால் அவருக்கு எதிராக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் திவ்யா என்பவர் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தொடர்ந்து சினிமா நடிகர் நடிகைகள் குறித்த அவதூறு செய்திகளை சோசியல் மீடியாவில் வெளியிட்டுவரும் பயில்வான் ரங்கநாதனை கைது செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த புகார் சம்பந்தமாக பயில்வான் ரங்கநாதன் கைதாகிறாரா? இல்லை இதுபோன்ற வீடியோக்கள் வெளியிடுவதற்கு அவருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.