மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

நடிகர் கார்த்திக், நடிகை ராகினி தம்பதியின் மூத்த மகன் கவுதம் கார்த்திக். மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் நடிகர் ஆனார். அதன்பிறகு வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மஹாதேவகி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்பட பல படங்களில் நடித்தார்.
கேரளாவைச் சேர்ந்தவர் மஞ்சிமா மோகன். இவரது தந்தை விபின் மோகன் மலையாள சினிமாவில் பிரபலமான ஒளிப்பதிவாளர். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து வந்த மஞ்சிமா, ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன்பிறகு மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்தார். கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன்பிறகு சத்ரியன், இப்படை வெல்லும், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார் படங்களில் நடித்தார். அவர் நடித்துள்ள எப்ஐஆர் படம் நாளை வெளிவருகிறது.
கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் தேவராட்டம் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது நெருக்கமான நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். இப்போது இவர்கள் காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்திருப்பதால் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இந்த காதல் செய்தியை இதுவரை மறுக்கவில்லை.