கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

தனுஷ் நடிப்பில் தமிழில் ‛‛மாறன், திருச்சிற்றம்பலம்'' படங்கள் தயாராகி வருகின்றன. இதையடுத்து நேரடி தெலுங்கு படத்தில் தனுஷ் நடிக்கிறார். முதல் படம் சேகர் கம்முலா படமாக உருவாக இருந்த நிலையில் இப்போது அவரது அடுத்த படமான வாத்தி முதலில் துவங்குகிறது. தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். இப்படத்தின் பூஜை ஐதராபாத்தில் இன்று(ஜன., 3) துவங்கியது. இதில் தனுஷ், நாயகி சம்யுக்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இயக்குனர் திரி விக்ரம் சீனிவாஸ் கிளாப் அடித்து துவக்கி வைத்தார். ஜன., 5ல் முறைப்படி படப்பிடிப்பை துவங்குகின்றனர். ஒரேக்கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க எண்ணி உள்ளனர்.