இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

மிக குறுகிய காலத்தில் தென்னிந்திய அளவில் முன்னணி இடத்தை பிடித்த நடிகைகளில் லேட்டஸ்ட் வரவு ராஷ்மிகா மந்தனா தான். இதில் கிடைத்த அங்கீகாரத்தை தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். இந்தநிலையில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீவள்ளி என்கிற கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார் ரஷ்மிகா, இந்தப்படம் வரும் டிச-17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் தொடர்ந்து கலந்துகொண்டு வருகின்றனர்.
இந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அல்லு அர்ஜுன் ராஷ்மிகா பற்றி குறிப்பிடும்போது, “ரசிகர்கள் மத்தியில் தேசிய அளவிலான 'க்ரஷ்' ஆக மாறிவிட்டார் ராஷ்மிகா. அதனால் நான் கூட ராஷ்மிகாவை க்ரஷ்மிகா என்றுதான் செல்லப்பெயர் வைத்து கூப்பிடுவேன்... நாம் பணியாற்றும்போது ஒருசிலரிடம் மட்டும் நமக்கு இனம் புரியாத அன்பு ஏற்படும்.. அப்படி ஒருவர் தான் ராஷ்மிகா. சரியான, இயக்குனர்கள், சரியான கதையை தேர்வு செய்தால் அவரது திறமைக்கு வரும் காலங்களில் மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார்” என பாராட்டு பத்திரமும் வாசித்தார் அல்லு அர்ஜுன்.




