ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் தனது கணவர் நடிகர் நாக சைதன்யாவை விட்டுப் பிரிந்தார். பிரிவுக்குப் பின் மீண்டும் சினிமாவில் பிஸியாக களமிறங்க அவர் முடிவு செய்துள்ளதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பான்-இந்தியா படமாக உருவாகி வரும் 'புஷ்பா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளார் சமந்தார். ஒரு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாடுவது இதுவே முதல் முறை. இப்பாடலில் கிளாமராக நடனமாடவும் சமந்தா சம்மதித்துள்ளாராம். எனவே, இந்தப் பாடலை பிரம்மாண்டமாக படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
இப்படி ஒரு 'ஐட்டம் சாங்' இதுவரை தெலுங்குத் திரையுலகத்தில் வந்தது இல்லை என்று சொல்லுமளவிற்கு பாடல் இருக்க வேண்டும் என படத்தின் இயக்குனர் சுகுமார் சொல்லி இருப்பதாகவும் தகவல்.
தற்போது தெலுங்கில் 'சாகுந்தலம்' படத்திலும், தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்திலும் நடித்து முடித்துள்ளார் சமந்தா. இரண்டு மொழிகளிலும் மேலும் பல புதிய படங்களில் நடிக்க கதைகளைக் கேட்டு வருகிறாராம்.