Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த குழந்தை - புனித் குறித்து ரஜினி உருக்கம்

10 நவ, 2021 - 12:57 IST
எழுத்தின் அளவு:
Rajini-hearfelt-condolence-to-Puneeth-Rajkumar

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்(46) மறைவுக்கு 10 நாட்களுக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் ஹூட் செயலி மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார், கடந்த அக்., 29ம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு திரண்டு அஞ்சலி செலுத்தினர். தமிழ் நடிகர்கள் பலரும் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

புனித் மறைந்த சமயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் நடிகர் ரஜினிகாந்த். அதனால் அப்போது அவருக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை. தற்போது குணமாகி வீட்டில் ஓய்வு பெற்று வரும் நிலையில் புனித் மறைவுக்கு ஹூட் செயலி மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார் ரஜினி.

அதில் அவர் கூறியிருப்பதாவது : ‛‛நான் மருத்துவமனையில் இருந்தபோது புனித் அகால மரணம் அடைந்தார். அந்த செய்தி இரண்டு நாட்களுக்கு பின் தான் எனக்கு தெரிவிக்கப்பட்டது. அதை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த குழந்தை, திறமையான அன்பும், பண்பும் கொண்ட அருமையான குழந்தை. புகழின் உச்சியில் இருக்கும் நேரத்தில் இவ்வளவு சின்ன வயதில் அவர் மறைந்துவிட்டார். அவரது இழப்பை ஈடு செய்யவே முடியாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. புனித் ஆத்மா சாந்தி அடையட்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
திரைக்கதை அமைக்க 3 வருடங்கள் ஆனது - 'குருப்' பற்றி துல்கர் சல்மான்திரைக்கதை அமைக்க 3 வருடங்கள் ஆனது - ... சமந்தாவுக்கு கிடைத்த புது அங்கீகாரம் சமந்தாவுக்கு கிடைத்த புது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

R Vijay - bangalore,இந்தியா
11 நவ, 2021 - 09:57 Report Abuse
R Vijay புனித் செய்த தர்மங்கள் அவர் காலத்திற்கு பின் தான் தெரிந்ததும் அதை போல் தான் ரஜினியும் அவர் செய்த தர்மங்கள் அவர் காலத்திற்கு பின் தான் தெரியும். ஒன்று நினைவில் கூவவும் அவர் வாழ்வில் நடத்த ஒரே விளம்பர படம் போலயோ க்கு மட்டும் தான். அவர் புபிளிசிட்டி பின்னல் போனதே இல்லை.
Rate this:
Maharajan - Bangalore,குவைத்
11 நவ, 2021 - 09:29 Report Abuse
Maharajan ஏன் தலைவா இரங்கல் செய்தி கூட 10 நாள் கழிச்சு தானா???... எனக்கு தலையே சுத்துது
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
11 நவ, 2021 - 04:33 Report Abuse
meenakshisundaram பாவம் ரஜினி -அந்த 'குழந்தை 'செஞ்ச தர்மத்தில் ஒரு பங்கேனும் செஞ்சிருக்கலாம் .
Rate this:
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
10 நவ, 2021 - 23:05 Report Abuse
Akash Selfish fellow.. suddenly realized his Annathe has to run in karnataka
Rate this:
K. JAISHANKAR - Chennai,இந்தியா
10 நவ, 2021 - 20:12 Report Abuse
K. JAISHANKAR நல்லவன் சாவான் கெட்டவன் வாழ்வான். சரியாதான் சொன்னாங்க.
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in