நாங்க இருக்கிறோம், ஆதரவு கொடுக்கிறோம் : அஜித்தை பார்க்க செல்லும் திரைபிரபலங்கள் | ரீ ரிலீஸில் மோதும் விஜய், அஜித் | சூர்யாவுக்கு வைத்திருந்த 'இரும்புக் கை மாயாவி', கை மாறிவிட்டதா ? | துரந்தர் 2 ஒத்தி வைக்கப்படவில்லை : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் | பிரபாஸின் ஸ்பிரிட் பட ரிலீஸ் தேதி வெளியானது | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் சிறை | கவலையில் கிர்த்தி ஷெட்டி, பிரார்த்தனா, நிதி அகர்வால், மாளவிகா மோகனன் | மெளனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகிறது | அடுத்தடுத்து தனுஷ் மீது தொடரும் அவதூறுகள் | ஹீரோயின் விஷயத்தில் பிரதீப் ரங்கநாதன் கில்லாடி |

லூசிபர் படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் தன்னை நிரூபித்துவிட்டார் மலையாள நடிகர் பிரித்விராஜ். அதை தொடர்ந்து தற்போது மீண்டும் மோகன்லாலை வைத்தே ப்ரோ டாடி என்கிற பெயரில் தனது இரண்டாவது படத்தையும் இயக்கி வருகிறார் பிரித்விராஜ். கதாநாயகிகளாக மீனா, கனிகா ஆகியோர் நடித்துவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்சமயம் ஹைதராபத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
அங்கே தான் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படப்பிடிப்பும் நடைபெற்றது. அந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் ஜெயம் ரவி படப்பிடிப்பு முடிந்து கிளம்புவதற்கு முன்னதாக பிரித்விராஜின் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று அவரை சந்தித்துள்ளார். உடன் அவரது மனைவி ஆர்த்தியும் சென்றுள்ளார். அந்தப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த நடிகை கனிகாவும் இவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.




