தமிழக அரசு விருது பெற்ற சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான், கீர்த்தி சுரேஷ் | சினிமாவை போன்று விளம்பரங்களிலும் சம்பாதிக்கும் தமன்னா | நானியின் ‛தி பாரடைஸ்' படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் | சிக்கிரி சிக்கிரி பாடலுக்கு சொந்தமாக நடன அசைவை வெளிப்படுத்திய ராம்சரண் | துல்கர் சல்மானின் 41வது படத்தில் இணைந்த ஜெகபதிபாபு | மூத்த மகனும் டைரக்ஷனில் இறங்குகிறார் ; பிரித்விராஜின் அம்மா தகவல் | படப்பிடிப்பில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய மிருணாள் தாக்கூர் | 24வது வருட காதலர் தினம் : ஜெனிலியாவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்த கணவர் | பிரேமம் ரீ ரிலீஸ் : முதல் வரவேற்பை இப்போதும் பெறுமா? | திருமண வீடியோ உரிமை : வேண்டாமென்று மறுத்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா? |

தெலுங்கு நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து வரும் நரேஷின் பதவிக்காலம் முடிவடைவதால் விரைவில் அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து நடிகர் பிரகாஷ்ராஜ், மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு, நடிகை ஜீவிதா ஆகிய மூன்று பேரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். இதனால் தற்போது தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நேரத்தில் பிரகாஷ்ராஜை கன்னடர் என்றொரு விசயத்தை முன்வைத்து எதிரணியினர் பிரச்சாரம் செய்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பிரகாஷ்ராஜ்க்கு ஆதரவாக தெலுங்கு நடிகரும், தயாரிப்பாளருமான பாண்ட்லா பிரகாஷ் என்பவர் குரல் கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், பிரகாஷ்ராஜ் தெலுங்கர் அல்ல, கன்னடர் தான். ஆனால், ஐதராபாத்தில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தை
தத்தெடுத்துள்ளார். அந்த மக்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து வளர்ச்சிப் பணிகளை ஆற்றி வருகிறார். அந்த அளவுக்கு தெலுங்கு மக்களுக்காக அவர் சேவை செய்கிறார். அப்படிப்பட்ட அவரை வெளி மாநிலத்தவர் என்று பிரித்துப்பேசுவது தவறு என்று பிரகாஷ்ராஜ்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
அதோடு, ராஜமவுலி, பிரபாஸ் போன்றவர்கள் எல்லாம் இன்றைக்கு தேசிய அளவில் பிரபலமாகி விட்டனர். அவர்களையெல்லாம் மற்ற மொழியினர் புறக்கணித்தால் ஏற்றுக்கொள்ள முடியுமா? கலைஞர்களை மொழி அடிப்படையில் பிரித்துப் பார்க்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.