அமைச்சர் வாக்குறுதி ; வேலை நிறுத்தத்தை கைவிட்ட மலையாள திரையுலகம் | ஊர்வசியின் சகோதரர் நடிகர் கமல் ராய் காலமானார் | பிளாஷ்பேக் : இளவரசு நடிகரானது இப்படித்தான் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரை காப்பாற்றிய நடன இயக்குனர் | கோட்டயத்தில் நடந்த உண்மை சம்பவம்: தலைவர் தம்பி தலைமையில் இயக்குனர் பேட்டி | உடற்கேலி : ஈஷா ரெப்பா வருத்தம் | பாரத், சான்வீயின் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | சிரஞ்சீவி படத்தில் நடிக்க இளம் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை | இம்மார்ட்டல் படம் குறித்து பகிர்ந்த இயக்குனர் | 'கர' படத்தில் வில்லத்தனம் கலந்த தனுஷ் |

இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழை தொடர்ந்து, மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த பிப்-14 அன்று துவங்கியது. இந்த சீசனையும் நடிகர் மோகன்லாலே தொகுத்து வழங்குகிறார். கேரளாவிலும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகியுள்ளதால், வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மக்கள், அதிகம் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக இது மாறியுள்ளது.
தற்போது 89வது நாளை தொட்டுள்ள இந்த நிகழ்ச்சி இன்னும் நூறு நாட்களை தொட இன்னும் 11 நாட்களே உள்ளன.. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக இந்த நிகழ்ச்சியின் நூறாவது நாள் கொண்டாட்டத்தை சிறப்பாக நடத்த முடியாது என்பதாலும், இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்து வரும் டிஆர்பி ரேட்டிங்காலும் இன்னும் இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியை நீட்டிக்க முடிவு செய்துள்ளார்களாம். அந்தவகையில் இந்த சீசன்-3 மொத்தம் 114 நாட்கள் நடைபெற இருக்கிறதாம்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், மலையாளத்தில் பிக்பாஸ் சீசன்-2 கடந்த வருடம் ஜன-5ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு கடந்த மார்ச் 20ஆம் தேதி அதாவது 76வது எபிசோட் வரை தான் ஒளிபரப்பானது. அந்தசமயத்தில் கொரோனா தாக்கம் மற்றும் அதை தொடர்ந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த நிகழ்ச்சி 76 நாட்களுடன் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.