ஆமா, அந்த பாபு யாரு...? : ரவி மோகனினிடம் கேட்கப்படும் கேள்வி | மங்காத்தாவை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் | மெரினா பீச் பெயரை மாற்ற வேண்டுமாம் : காமெடி பண்ணும் புது ஹீரோ | இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் தமன்னா | உரிமையாளர் பார்த்திபனுக்கே 'க்ளைம்' கேட்கும் படங்கள் | 100வது நாள் போஸ்டரை வெளியிட்ட 'டியூட்' | லாக்டவுன் : இந்த முறை சரியாக வந்துவிடுமா ? | ரஜினி 173வது படத்தில் நடிக்கிறாரா சாய் பல்லவி? | பார்டர் 2 உடன் துரந்தர் 2 டீசர் இல்லை : இயக்குனர் வெளியிட்ட தகவல் | ரீ ரிலீஸ் மோதலில் விஜய், அஜித் ரசிகர்கள் |

கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக நடித்துவரும் நடிகர் மோகன்லால் தனது நீண்டநாள் கனவான டைரக்சன் துறையில் தற்போது அடியெடுத்து வைத்துள்ளார். அவர் முதன்முதலாக இயக்கும் 'பாரோஸ்' என்கிற படத்தின் துவக்க விழா பூஜை நேற்றுமுன்தினம் நடைபெற்றது. பேண்டசி படமாக உருவாகும் இந்தப்படத்தின் கதையை 'மைடியர் குட்டிச்சாத்தான்' பட இயக்குனர் ஜிஜோ பொன்னூஸ் தான் எழுதியுள்ளார். நேற்று நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்ட ஜிஜோ பொன்னூஸ், பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஒரு புதிய தகவல் ஒன்றை கூறினார்.
'இந்தப்படத்தின் கதையை தான் பல வருடங்களாக உருவாக்கினேன். இதை மோகன்லாலிடம் சொன்னபோது தானே இயக்குவதாக அவர் கூறினார். ஆனால் குழந்திகளுகான பேண்டசி கதையாக இதை நான் எழுதியிருந்தேன். மோகன்லால் முதன்முதலாக இயக்கம் படம் என்பதால் இது இளைஞர்களையும் கவரும் விதமாக இருக்க வேண்டும் என நினைத்தேன். இந்த கதையை மோகன்லாலிடம் கூறியபோதே அவரது மகள் விஸ்மாயாவும் இந்த கதையை கேட்டுவிட்டு, இளைஞர்களை கவரும் விதமாக இதில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம், என்ன விஷயங்களை புதிதாக சேர்க்கலாம் என கூறினார். அவரது ஆலோசனையையும் மனதில் வைத்து பைனல் ஸ்கிரிப்ட்டை உருவாக்கினோம்” என கூறினார்.




