சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

மலையாளத்தில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி துவங்கி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக லட்சுமி மற்றும் மஸ்தானி என்கிற இருவர் இடையில் நுழைந்தனர். இந்த வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே ஆதிலா மற்றும் நூரா என்கிற ஒரு பாலின ஜோடி பங்கேற்றுள்ளது. லட்சுமியும் மஸ்தானியும் தாங்கள் வந்ததிலிருந்து இந்த ஜோடியை கடுமையாக விமர்சித்தும் கிண்டலடித்தும் பேசி வந்தனர்.
கடந்த வாரம் சனிக்கிழமை வந்த மோகன்லால் மஸ்தானி மற்றும் லட்சுமி இருவரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான் என்று லட்சுமி மற்றும் நூராவுக்கு ஆதரவாக பேசினார். அவர் கடுமை காட்டியதன் விளைவோ என்னவோ ஞாயிற்றுக்கிழமை மஸ்தானி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் மோகன்லால் இப்படி எல்ஜிபிடிக்யூ (LGBTQ) மனிதர்களுக்காக பரிந்து பேசியது பொதுவெளியில் சோசியல் மீடியாவில் ஒரு மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. பலர் மோகன்லாலின் கருத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் சிலர் எல்லோரும் சமம் என்று சொன்னாலும், இப்போது வரை எதற்காக மாற்றுப் பாலினத்தவரிடமும் ஒரு பாலின ஜோடிகளிடமும் இருந்து ரத்ததானம் பெறுவது தடை செய்யப்பட்டு உள்ளது என்கிற கேள்வியை எழுப்பி உள்ளனர், இது குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.




