இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
இந்திய சினிமாவில் நம்பர் ஒன் திரைப்படமாக இப்போதும் கொண்டாடப்பட்டு வரும் படம் 'பதேர் பாஞ்சாலி'. சத்யஜித் ரே இயக்கிய படம். 1955ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சுபிர் பானர்ஜி, கனு பானர்ஜி, கருணா பானர்ஜி இவர்களுடன் முக்கிய கேரக்டரில் நடித்தவர் உமா தேஸ்குப்தா. இவர் துர்கா என்ற இளம் பெண்ணாக நடித்தார். முக்கிய கேரக்டர்களுக்கு இணையாக அப்போது இவர் கேரக்டர் பேசப்பட்டது.
பதேர் பாஞ்சாலி படத்திற்கு பிறகு பெரிதாக நடிக்கவில்லை. ஆனாலும் துர்கா கேரக்டர் இன்றவுளம் ரசிக்கப்பட்டும், பேசப்பட்டும் வருகிறது. கோல்கட்டாவில் குடும்பத்தினருடன் வசித்து வந்த உமா கடந்த சில வருடங்களாகவே புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிசிக்கை பெற்று வந்தார். இந்த நிலையில் கோல்கட்டா மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. உமாவின் மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். உமா இறந்து விட்டாலும் துர்கா வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.